பக்தியோடு எங்களால் அழைக்கப்பட்ட எங்கள் குடும்ப புனித பித்ருக்களே ! நல் மனதோடு. பிரியத்தோடு இங்கு வாருங்கள் .நாங்கள் சொல்லும் மந்திரங்களை ப்ரத்தனைகளை காது கொடுத்து நன்றாக கேட்டு,சகல மங்களங்களையும் அளித்து எங்களை ரக்ஷித்து, எங்களது சிரத்தையான வழிபாட்டை தேவர்களிடமும் சொல்லி அனுக்ரஹிக்க செய்யுங்கள் .
உபUஹுதா: பிதரU: ஸ்ஸெளம்யாஸோ
பர்ஹி ஷ்யேUஷுUநிதிஷு ப்ரியேஷுU|
த ஆ கU3மந்து த இஹ ருவந்
த்வதிU4 ப்3ருந்து தே அUவருத்வஸ்மான்||
சாஸ்திரங்கள் இறந்த நமது தாய், தந்தை முதலிய உறவினர்களுக்கு 12 நாட்கள் செய்யும் சடங்குகளை அந்திம சம்ஸ்காரம், அபரகிரியை, காரியம் என்று சொல்லப்படுகிறது.
பித்ருக்களை வருடந்தோறும் புஜிப்பது நமது குடும்ப நன்மைக்கே.அபரக்கிரியை சிரத்தையாக செய்ய ஸ்ரீராமதீர்த்தம் ஏற்படுத்தி உள்ள வசதிகள்,
பித்ருக்கள்(மூதாதையர்கள்) சிரத்தையுடன் செய்யப்படும் சிரார்த்தத்தால் மகிழ்ந்து, தன தான்ய செல்வங்கள் புகழ் நீண்ட ஆயுள் இனிமையான வாழ்வு எதிரிகளற்ற வாழ்வு, நல் சந்ததிகள்(குழந்தைசெல்வம்) ஆகியவற்றை வழிபடுபவர்களுக்கு (வாரிசுகளுக்கு) வழங்குகிறார்கள்.
பொதுவாக பஞ்சாங்கத்தில் கையாளப்படும் அனைத்து தலைப்புகள் பற்றிய விளக்கங்கள் இந்த பக்கத்தில் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த “பஞ்சாங்கம்” என்ற பகுதியின் கீழ் தரப்பட்டுள்ள அனைத்து இணைப்பு மெனுக்களால் இணைக்கப்படும் பக்கங்கங்களில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் சுருக்கங்கள் இங்கே தரப்பட்டுள்ளன. ஜோதிடத்திற்கு பஞ்சாங்கம்தான் அடிப்படை. பஞ்சாங்க அறிவு நன்றாக உள்ளவா்கள் எளிதாக ஜோதிடத்தைப் புரிந்துகொள்ளலாம். எனவே பஞ்சாங்கத்தில் அடங்கும் விஷயங்கள் எதையும் ஜோதிடம் என்ற தலைப்பில் கொடுக்கவில்லை.